இந்த வாரத்தின் கோவில் திருவண்ணாமலையில் இருக்கும்
திரு அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம்
மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி
பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே
சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த
மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த
மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும்,
திரேதாயுகத்தில்
மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின்
கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது.
முக்தி தரும் இடமாக கருதப்படும்
இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.
திருவாரூரில்
பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை
சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும்,
ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில்
சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள்
உள்ளது. அவை இந்திர லிங்கம்,
அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி
லிங்கம், வருண லிங்கம், வாயு
லிங்கம், குபேர லிங்கம் மற்றும்
ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை
சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று
சுற்றினால் மிகவும் விசேஷம். இத்திருக்கோவிலில்
ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும்
பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி
சந்நிதியுள்ளது. மூன்றாவது பிராகரத்தில்
உண்ணாமலை
அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற
பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, வினாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால
பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள
மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர்
மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால்
மண்டபம், மற்றும் பல சந்நிதிகள்
உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ
மரம். இந்த மரம் மருத்துவ
குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய
தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு
விட்டு செல்வார்கள்.
ஸ்தல வரலாறு; ஒரு காலத்தில்
பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற
சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும் சிவபெருமானை
மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள். ஆகையால் சிவபெருமான் இவர்களின்
உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க
ஒரு போட்டி வைத்தார். யார்
முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ
பார்த்து
சொன்னால்
அவர் தான் சிறந்தவர் என்றார்.
பிறகு சிவன் ஜோதிமயமாக தன்
உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக
அவாதாரம் எடுத்து அடியை காண
பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
தான் செய்தது தவறு என்று
ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக
மாறி முடியை தேடிச் சென்றார்.
இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து
கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின்
முடியைக் காண இன்னும் எவ்வளவு
தூரம் செல்ல வேண்டும் என்று
கேட்டார். அதற்கு தாழம்பூ தாம்
பல்லாயிற வருஷ காலமாக கீழே
விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது.
இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது
என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை
பார்த்ததாக பொய் சாட்சி கூற
கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.
இதனால் கோவம் அடைந்த சிவபெருமான்
பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்
சாட்சி சொன்ன தாழம்பூ
சிவபூஜைக்கு
ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார். அப்படி
ஜோதியாக சிவன் நின்ற அந்த
இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இத்தலத்தை
ஒட்டிய மற்ற வரலாறு கதைகளை
அடுத்த பதிவில் பார்க்கலாமா.....
(தொடரும்)
sarvam sivamayam
sarvam sivamayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக