ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்



ஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்


                                   
பகவத் கீதை என்றாலே என் நினைவுக்கு வரும் சித்திரம் ஸ்ரீ கிருஷ்ணர் தேரை செலுத்த, அதில் அர்ஜுனன் பின்னிருந்த படி பயணிக்கும் இந்த சித்திரம் தான்.இந்தச் சித்திரம் மிகுந்த உட்பொருள் உடையது
இந்த சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் நம்மில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.
முதலில் எவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம்.
போர்- வாழ்க்கை.
போர்க்களம்- இந்த பூவுலகம்.
தேர்- நம் உடலை குறிக்கிறது.
ஆர்ஜுனர்- ஜீவாத்மாவை, தனி ப்ரஞ்யை, குறிக்கிறார்.
குதிரைகள்- மனதை குறிக்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் கடிவாளம் விதியை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் சாட்டை- நம் அறிவை புத்திசாலித்தனத்தை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர்- பரமாத்மா, மனசாட்சி, உள்ளுணர்வு -இவற்றை குறிக்கிறார்.
தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- நல்லொழுக்கத்தை குறிக்கிறார்.
நாம் வாழும் இந்த பூமி போர்க்களம். நம் வாழ்க்கை போர்.
எதிர் அணியில் அணிவகுத்து நிறபவர்கள் நாம் செய்த தீவினைகள். அவை எப்போதும் நமக்கு ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீ வினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன.
குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படி நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில் தான் செல்கிறது. உ-ம்: மனம் சாப்பிட வேண்டும் என்றால், உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்கிறோம். அதனால் தேர் நம் உடலை குறிக்கிறது.
அர்ஜுனர் தான் ஜீவாத்மா. தனி ப்ரஞ்யை. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனரின் வேலை அம்புகள் எய்வது மட்டும் தான். அதே போல நமது வேலையும் நம் கடமையை செய்வது மட்டும் தான்.
மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கக்கூடியது. ஒரே சமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுது உணவிட வேண்டுமோ அப்பொழுது உணவளித்து. எப்பொழுது நீர் கொடுக்க வேண்டுமோ அப்போது நீர் கொடுத்து, அதை உற்சாகப் படுத்த வேண்டும். மனமும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு இவை ஏற்படும். அதனால் அதன் ஆசைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் இந்த குதிரை போல ஆரோக்கியமானதாக இருக்கும்.
கடிவாளம் தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்கிறது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில் தான் பயணிக்கும்.
கடிவாளத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். இங்கே இது ஒரு விதிவிலக்கு. கடவுள் நம் விதியை இயக்க வேண்டும் என்றால் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.
கிருஷ்ணர் கையின் சாட்டை நம் புத்தி. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் செல்லும் போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் செல்லும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைத்து விடும்.
கிருஷ்ணர் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா... இவர் உருவம் எடுத்து வந்தால் ஆயிரம் நாமங்கள். உருவமின்றி நமக்குள் இருந்தால் அதற்கும் எத்தனை நாமங்கள். இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்கிறது.
ஆஞ்சநேயர்- இவர்கள் கொடியில் ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

சனி, 6 ஆகஸ்ட், 2011

SRI RAJA RAJESHWARY AMBAL UPPUKKULAM MAANTHAI (MANNAR)


ஆடிப்பூரம் பற்றி தெரிந்து கொள்வோம்


ஆடிமாதம் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை யோகத்தில் நளவருடம் சனிக்கிழமை, சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாள் அது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்துக் கொண்டிருந்தார். திடீரென குவா குவா சத்தம். புதர் போல மண்டியிருந்த இடத்துக்கு சென்றவர், துளசி செடியின் அருகே கை, கால்களை உதைத்துக்கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டினார். அன்புடனும் பாசத்துடனும் தனது மகளாகவே கருதி வளர்த்து வந்தார்.

சிறு வயதில் இருந்தே கோதைக்கு ஆண்டவன் மீது மிகுந்த பக்தி. சகல சாஸ்திர ஞானங்களையும் கற்றுத் தேர்ந்தாள். இதற்கிடையில், பரந்தாமன் மீதான பக்தியானது காதலாக மாறியது. கண்ணனை தன் மணாளனாக நினைக்க ஆரம்பித்து கனவிலேயே காதல் செய்து வந்தாள்.

வயதான போதிலும், நந்தவனத்தில் பூ பறித்து பெருமாளுக்கு சாற்றும் திருப்பணியை பெரியாழ்வார் விடவில்லை. ஆண்டவனுக்கு அணிவிப்பதற்காக மாலை கட்டி வைத்திருப்பார். தந்தைக்கு தெரியாமல் அங்கு வரும் கோதை, ‘என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலைதானே. நான் அணிந்துவிட்டு கொடுத்தால்தான் என்ன’ என்று நினைப்பாள். அதை அணிந்து அழகு பார்ப்பாள் கோதை. மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவாள். இது பல நாட்கள் தொடர்ந்தது.

ஒருநாள். பகவானுக்கு சாற்ற இருக்கும் மாலையை கோதை அணிந்துகொண்டிருப்பதை பெரியாழ்வார் பார்த்து பதறிவிட்டார். “அபசாரம்! ஆண்டவனுக்காக தொடுத்துவைத்திருக்கும் மாலை. இதை சூடலாமா?” என்று கடிந்துகொண்டார். அவசர அவசரமா வேறொரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்றிவிட்டு வருகிறார்.
அன்று இரவு. பெரியாழ்வாரின் கனவில் பெருமாள். “கோதை என் மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னாயிற்று?” என்கிறார். கோதையின் பக்தியை உணர்கிறார் பெரியாழ்வார். ஆண்டவனின் உள்ளத்தையே தனது பக்தியால் ஆண்ட கோதை அன்று முதல் ‘ஆண்டாள்’ என அழைக்கப்படுகிறாள். அவள் சூடித் தரும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வருகிறார் பெரியாழ்வார்.

ஆண்டாளுக்கு 15 வயதாகிறது. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் பெரியாழ்வார். “ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவனின்றி வேறொருவரை திருமணம் செய்ய முடியாது” என்கிறாள் ஆண்டாள். குழப்பத்தில் இருக்கும் பெரியாழ்வாருக்கு அப்போதும் வழிகாட்டுகிறான் பரந்தாமன். “அவள் விருப்பப்படியே ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துவா. ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் கனவில்.
பெரியாழ்வாரின் கனவு கலைகிறது. கனவில் இறைவன்தான் கூறியிருக்கிறார் என்றாலும் சற்று குழப்பம். “கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி வந்து சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது? மானிடகுல பெண்ணை சுவாமி எப்படி திருமணம் செய்வார்? என்று பல்வேறு குழப்பங்கள் அடைந்தார்.

ஆனாலும், ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்பதில் ஆண்டாள் உறுதியாக இருந்தாள். தயக்கத்துடனேயே அவளுடன் புறப்பட்டார் பெரியாழ்வார். ஸ்ரீரங்கம் வந்தடைந்ததும் அவருக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி. காரணம் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் பட்டாச்சாரியார்கள் தயாராக காத்திருந்தார்கள். “சாட்சாத் லட்சுமி தேவியே வரப்போவதாக நேற்றுதான் எங்கள் கனவில் பெருமாள் சொன்னார்” என்றார்கள்.

சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. “ஸ்ரீரங்கநாதா” என்று கூறியபடியே கோயில் கருவறைக்கு ஓடுகிறாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி, வடிவாய் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கிறாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரமாகும்.

ஆண்டவனுடன் ஆண்டாள் இரண்டற கலப்பதற்குமுன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை நமக்கு அருளித்தந்துள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இதில் உணர்த்தியிருக்கிறார். இயற்கையின் தத்துவத்தையும் தன் தீஞ்சுவைத் தமிழில் நமக்கு அருளியுள்ளார். இதில் திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம், மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க அருள்புரிந்துள்ளார். நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்துப் பாடல்கள் திருமணப் பாடல்கள். திருப்பாவையையும், வாரணாமாயிரத்தையும் பக்தி சிரத்தையுடன் படிப்பதால் தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும். கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமணம் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.








பக்தியால் இறைவனை நெருங்கி உயர்வு பெற்ற ஆண்டாள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூர திருநாள். வாழ்வில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் இறைவன் அருளையும் பெற இந்நன்னாளில் அவள் பாதம் பணிவோமாக.

வியாழன், 10 மார்ச், 2011

SRI SOLAAPURY AMBAAL SRI PURAM (THIRUPPUR)

SRI SOLAAPURY AMBAAL   SRI PURAM (THIRUPPUR)
VIDEO
VIDEO
sri solaapury amma 
SRI RAGU & KHEDHU 
WORLs SPECIALs 
ONE STONE 
TWO HEROs
760-850 years old ambaal kharppagiragam-moolastanam
temple president   
 temple guru pramahsri kamalathiyakarajan sivam            CONTACT F0R more deatails -00919578442184/9578442184